ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் கட்ட விசாரணையில் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மாணவி தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவியை டிவி பார்க்க வேண்டாம் என பெற்றோர்கள் திட்டியுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் திங்கள் கிழமை அன்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…