Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோட்டில் சோகம் :-10ம் வகுப்பு மாணவி தற்கொலை...!

Bala August 04, 2022 & 12:32 [IST]
ஈரோட்டில் சோகம் :-10ம் வகுப்பு மாணவி  தற்கொலை...!Representative Image.

மதிப்பெண் குறைந்ததால் ஈரோட்டில் 10 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஈரோடு அடுத்த கல்லுக்கடைமேடு பகுதியை  சேர்ந்த பசீர் அகமது என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மதிப்பென் குறைவாக எடுத்ததால் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். மேலும்  டிவி,  செல்போன்  பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மதிப்பெண் குறைவு காரணமாக ஏற்கனவே மன உளைச்சலிலிருந்த  மாணவி, பெற்றோர்கள் திட்டியதை அடுத்து எலி மருந்தைச்  சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு அடிக்கடி வாந்தி வருவதைக் கண்ட பெற்றோர்கள் பதட்டத்துடன் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச்  சென்றனர்.  அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாகா உயிரிழந்தார். 10 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்