ஈரோடு மாவட்டத்தில் 75- வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரானது நிறத்தில் வண்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் முன் பகுதியில் அணையில் இருந்து மேல் மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தேசியக் கொடியின் நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விளக்குகளின் வெளிச்சத்தில் 9 மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேசியக்கொடி நிறங்களில் வெளியேறுகிறது. இந்த காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…