இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றினார். இதனையடுத்து சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கொடியேற்றினார்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அணவரும் தங்களது வீடு, வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் கோரிக்கை வைதார். அதன்படி, அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு மளிகைக்கடையில், கடையின் முன்புற டேபிளில் வைக்கப்பட்டுள்ள முட்டை அட்டையில் தேசிய கொடியின் மூவர்ணத்தை தயார் செய்து பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து கடைக்காரரை பாராட்டி செல்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…