Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவன் தற்கொலை.. சென்னையில் பரபரப்பு!!

Sekar Updated:
தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவன் தற்கொலை.. சென்னையில் பரபரப்பு!!Representative Image.

சென்னையில் தனியார் கல்லூரியில் 6வது மாடியில் இருந்து குதித்த மாணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், மேலகோட்டையூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் என்ற மாணவன் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

அவர் திடீரென தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே வெளியேறி கல்லூரி வளாகத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிஹ்ச்சை பலனின்றி புத்தாலா ஓம்கிரீஸ் உயிரிழந்தார். இந்நிலையில், மகனின் இறப்பு குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என மாணவரின் பெற்றோர் காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்