சென்னை: தமிழக போக்குவரத்துத் துறைக்கு 1000பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் உள்ள பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்து வாங்கி இயக்கு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதேபோல் லேசான பழுதுடன் இயங்கும் 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதியில் விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 200பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. இதை தவிர்த்து விழுப்புரம் கோட்டத்தில் 190 பேருந்துகளும், கோவை கோட்டத்தில் 163 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளது. இதை தவிர மதுரை கோட்டத்தில் 169, நெல்லை கோட்டத்தில் 129 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…