Erode latest news : ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகள் முன்பு பணிகள் தொடங்கியது. இந்நிலையில், அப்போதைய மாவட்ட நிர்வாகம் சிலை வைக்க அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதி சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். ]
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஈரோடு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…