Erode flash news : ஈரோடு மாவட்டத்தில் புலி தாக்கி மாடு பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாளவாடி வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் விவசாய நிலத்திற்க்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடி வருகிறது.
இதேபோல், நேற்று முன்தினம் மாலை சேசன் நகரைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார் என்பவர் மாடுகளை தோட்டத்தில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அச்சமயம் வனப்பகுதியில் புகுந்த புலி மாட்டை அடித்து கொன்றது. மேலும் பல மாட்டை கடித்து காயத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 காவல் நாய், 2 கன்று குட்டிகளை புலிகள் கடித்து பலியானது. இதனையடுத்து தற்போது மாடு பலியானதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனச்சரகர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்டார். மேலும், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கண்காணிப்பு கேமரா பெருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்கப்படும் என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…