பண்டிகை காலம் என்பதால் அனைத்து நிறுவனத்திலும் தொழிலாளர்கள் போனஸ் எதிர்ப்பார்த்து பல திட்டங்கள் கொண்டு இருப்பவர். தங்கள் வருமானத்தில் தினசரி வாழ்க்கை நடத்தும் சாமானியனுக்கு நிறுவனம் பண்டிகை காலத்தில் அளிக்கும் போனஸ் அவர்களுக்கு பண்டிகையை மகிழ்ச்சியாக்கும். இந்த போனஸ் விவகாரம் சில சமயம் தொழிலாளர் மற்றும் முதலாளிகள் மத்தியில் சில எதிர்பார்ப்புகளை உருவாக்கும். அதேபோல் அவினாசியில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.
தீபாவளி போனஸ்
திருப்பூர் மாவட்ட ஜெனரல் வர்க்கர்ஸ் யூனியன், அவினாசி ஒன்றிய கிளை தலைவர் கனக ராஜ், செயலாளர் செல்வ ராஜ் ஆகியோர் அவினாசி ஸ்ரீ கருணாம்பாள் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இந்த மனுவில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் விசைத்தறி தொழிலாளர் பொருளாதார நிலை தடுமாறி கொண்டு இருக்கிறது. எனவே, தொழிலாளர் சுமையைக் குறைக்கும் வகையில் கடந்த ஆண்டை விட 10% கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸை நிறுவனம் முன்கூட்டியே வழங்கினால் தொழிலாளருக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…