இன்றைய அவசர உலகில் பொருளை சேர்ப்பது அல்லது சேமிப்பதை விட பாதுகாப்பது தான் மிகப்பெரிய சவால் ஆகும். இதற்கு காரணம் என்னவென்று விவாதித்தால் அதற்கு பதில் பலவிதமாக வரும். சென்ற தலைமுறையில் மக்களுக்கு இரவில் இருந்த திருட்டு பயம் இன்றைய சுழலில் பகலிலும் வந்துவிட்டது. விதியில் தனியாக செல்வதாக இருந்தாலும் கவனமாக செல்லும் நிலை உருவாகியது அவலம்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த பலவஞ்சிபாளையம் என்னும் ஊரில் வீட்டை பூட்டிய வீட்டு உரிமையாளருக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. அது என்ன அதிர்ச்சி..! அப்படி என்ன நடந்தது என்பதை அறிய வேண்டுமா? மேலும் படிக்கவும்.
பூட்டிய வீட்டில் கைவரிசை
திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் ஊரை சேர்ந்த செல்வராஜ், சரஸ்வதி தம்பதிக்கு தான் இந்த சோகம் ஏற்பட்டது. இந்த தம்பதி தங்கள் மகளை காண திண்டுக்கல் செல்ல திட்டமிட்டு கடந்த 12 ஆம் தேதி (திங்கள்) அன்று வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். திண்டுக்கல் சென்று திரும்ப வீடு திரும்பியபோது இந்த தம்பதிக்கு பேர் அதிர்ச்சி ஏற்பட்டது.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது, இதை பார்த்த பின் அதிர்ச்சியில் வீட்டிற்குள் சென்று பார்த்தால் பீரோ உடைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்தது அவர்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இறுதியாக அவர்கள் சோதித்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் திருடி உள்ளனர். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…