திருப்பூரில் நீட் தேர்வு மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு 18 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். எப்பையும் போல இன்று மையத்திற்கு சென்ற மகளை மாலை அழைத்து வர சென்றுள்ளார் மணிகண்டன். வகுப்பு முடிந்து பாத்ரூம்மிற்கு சென்று வருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு சென்ற மகம் திடீரென்று கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
பதறிப் போன மணிகண்டன் மற்றும் அங்கிருந்த மக்கள் மாணவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயம் முடிந்த மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் தலையின் பின்பக்கம் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் பலமாக ஏற்பட்டதனால் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பின் விரக்தியால் அல்லது வேறேதும் பிரச்சனையால் இந்த முடிவு எடுத்தாரா அந்த மாணவி என்று விசாரணையில் முடிவில் தான் தெரியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…