வீட்டின் குளியல் அறையில் செல்போன் வைத்து பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் நர்மதா தெருவில் ஒரு வீட்டில் நிறைய பெண்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அந்த வீட்டிற்கு அருகே நேற்று காலை சந்தேகத்திற்கு இணங்க 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், அந்த வாலிபர்களிடம் பெண்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே என்ன வேலை என்று கேள்வி கேட்டுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு பேரும் பதற்றத்துடன் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதில், ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற போது, அதில் உள்ள படங்கள், வீடியோக்களை அழித்தார். இதனால், பொதுமக்களுக்கு சந்தேகம் வலுப்பெற்று, அவர்கள் இருவரையும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த போது இவர்கள் இருவரும் வேளச்சேரியைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பவரும், இவர்களது பெயர் வெங்கடேசன், ஸ்ரீராம் என்பதும் தெரிய வந்தது.
பிறகு, போலீசார் சந்தேகப்பட்டு அவர்களிடம் இருந்த செல்போனை வாங்கி படங்கள், வீடியோக்கல் உள்ளிட்டவை எதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர். ஆனால், அதில் எதுவும் இல்லை. பிறகு, உடனடியாக சாஃப்ட்வேர் மூலம் செல்போனில் இருந்த வீடியோ படங்களை திரும்ப எடுத்தனர். அதில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் 100க்கும் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்த விசாரித்ததில் அவர்கள் தெரிவித்ததாவது வீடியோக்களை இணையதளத்திற்கு விற்கவும், தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசிக்கவும் எடுத்ததாக வாலிபர்கள் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடு மட்டுமல்லாமல், வேளச்சேரி மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குச் சென்று வீடுகளில் செல்போனை ரகசியமாக வைத்துப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வீடுகளில் செல்போனை வைத்து ரகசியமாக வீடியோ எடுத்த இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…