Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Latest News : தமிழகத்தில் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் : மதுரை எம்பி வரவேற்பு.

Muthu Kumar May 18, 2022 & 08:19 [IST]
Madurai Latest News : தமிழகத்தில் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் : மதுரை எம்பி வரவேற்பு.Representative Image.

Madurai Latest News : தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொது பெட்டிகள் உடைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும். இதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

முன்பதிவில்லா ரயில்கள்

தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொது பெட்டிகள் உடைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மதுரை எம்பி வெங்கடேசன்

தெற்கு ரயில்வேயில்சாதாரண பயணி வண்டிகளை இயக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன் என மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

விரைவு ரயில்

இந்நிலையில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம், மதுரை- இராமேஸ்வரம், திருச்செந்தூர்- திருநெல்வேலி, செங்கோட்டை- திருநெல்வேலி  ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் மே 30 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவு 17 .5 .22 வெளியிடப்பட்டுள்ளது .

கோரிக்கை

மேலும், கோயமுத்தூர்- மேட்டுப்பாளையம் இடையே மே 23 முதல் விரைவு வண்டி பொது பெட்டிகளுடன் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்து எனவும் தெரிவித்துள்ளார். இது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக மதுரை எம்பி தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்