Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிரம்பி வழியும் மேட்டூர் அணை; நீர்வரத்து  24,100 கன அடியாக அதிகரிப்பு! 

KANIMOZHI Updated:
நிரம்பி வழியும் மேட்டூர் அணை; நீர்வரத்து  24,100 கன அடியாக அதிகரிப்பு! Representative Image.

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நள்ளிரவில்  திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், காவிரியின் உபரி நதிகள் ஆன சின்னாறு மற்றும் தொப்பையாறு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணை  நடப்பு நீர் பாசன ஆண்டில்  மூன்றாவது முறையாக கடந்த 7ம் தேதி மீண்டும் நிரம்பியது.தொடர்ந்து ஐந்தாவது நாளாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று இரவு 11 மணி அளவில்  அணைக்கு வரும் நீரின் வரத்து  வினாடிக்கு 24,100 கன அடியாக அதிகரித்ததால் அணையின் உபரிநீர் போக்கி 37 நாட்களுக்கு பிறகு இரவு பதினோரு மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டது.

உபரி நீர் போக்கி மதகுகள் உயர்த்தப்படும் முன்பாக எச்சரிக்கை சங்கு ஒளிக்கப்பட்டது. பின்னர் உபரிநீர் போக்கி மூலம் வினாடிக்கு 2,500 கன அடி வீதமும் , நீர் மின் நிலையங்கள் வழியாக 21,000 கன அடி நீரும் என மொத்தம் 23 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.  அணையில்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்