Erode latest news : ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி.
100 நாள் வேலை திட்டம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மெட்டல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கய்யா என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) தொழிலாளியாக பணி செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் சாலை ஓரத்தில் வடிகால் அமைக்கும் பணியில் இருக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளார். பின்னர் மாலை 4 மணியளவில் தான் பணி செய்வதற்காக எடுத்து சென்ற கடப்பாரை மற்றும் மண்வெட்டியை அருகிலுள்ள மகாதேவப்பா என்பவர் தோட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளார்.
கிணற்றில் விழுந்த தொழிலாளி
இந்நிலையில், அந்த தோட்டத்திற்க்கு செல்லும் வழியில் இருந்த தேங்காய் மட்டை மீது கால் வைத்தபோது வழுக்கி அருகில் உள்ள சுமார் 60 அடியில் பயனற்று கிடந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
தீயணைப்புத் துறை
இதனையடுத்து, அருகில் இருந்த தொழிலாளர்கள் இதனை பார்த்த உடன் தாளவாடி போலீசார் மற்றும் ஆசனூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ரங்கய்யாவின் உடலை மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…