சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமாவரித்துறையின் ரெய்டு நடத்தினர். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு வீட்டிலும் வருமாவரித்துறையின் ரெய்டு நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் அன்பு செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக சினிமா படங்கள் பல தயாரித்து வருகிறார். மேலும், பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மேலும் பல சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கலாம் என அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த திடீர் ரெய்டு சம்பவம் திரைத்துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…