வி ஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் நடித்துள்ள திரைப்படம் ஜீவி. இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் வெளியான ஜீவி திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட்டாக அமைந்தது.
மற்ற கதாநாயகர்களைப் போலல்லாமல், ஜீவி நாயகன் வெற்றி பார்த்து பார்த்து கதைகளைத் தேர்வு செய்கிறார். இப்போது ஜீவி படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவுள்ளது.
ஜீவி திரைப்படத்தின் கதை ஒரு விசித்திரமான பயணம். ஆரம்பத்தில் வேறு எதையோ சொல்ல வந்து பின் இடைவேளையில் வேகமெடுத்து வேறொரு கதையை நோக்கி பயணிக்கும்.
வெற்றி, கருணாகரன் இருவருமே ஒரே வீட்டில் தங்கி ஒரே கடையில் வேலை பார்த்து வரும் ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்தை எட்டிப் பார்த்துவிடலாமா என முயற்சித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள். பணம் சம்பாதித்து வாழ்க்கையை வேறு மாதிரி வாழ வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்.
பெரிய அளவில் படிப்பு இல்லாததாலும் சரியான வேலை இல்லாததாலும் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதே தெரியாத அளவுக்கு இருக்கும் இவர்கள் இருவரும் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு ஓனரிடமிருந்தே நகையைத் திருட நினைக்கிறார்கள். அதற்கான திட்டத்தையும் தீட்டிவிட்டு திருட்டையும் நிகழ்த்துகிறார்கள்.
ஒரு பக்கம் திருடு போன நகை, திருடியது யார் என விசாரணை நடந்துகொண்டிருக்க, ஹீரோ வெற்றி தனது சொந்த ஊருக்கு குடும்ப விசயம் காரணமாக புறப்பட்டு சென்று விடுகிறார். நகைகள் எங்கே என தீர விசாரணை செய்யும்போது, சில க்ளூக்கள் கிடைக்கின்றன. ஆனால் இப்போது கதையில் மிகப் பெரிய டுவிஸ்ட் ஒன்று நிகழ்கிறது.
இந்த விசயங்கள் அனைத்தும் எதனால் நடக்கிறது, தான் யார், நகையை பறிகொடுத்தவருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என பல வித கேள்விகளுக்கு பதில் படம் பார்க்கும்போது கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…