பிரேமம் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் அதன்பிறகு பல வருடங்களுக்குப் பிறகே அடுத்த படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படமான கோல்டு, ப்ரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவானது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அடுத்த படம் எப்போது என்பது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
ப்ரேமம் படத்தை இயக்கி 7 வருடங்களுக்குப் பிறகு இயக்கிய படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், படம் வெளியான சமயத்தில் வரவேற்பு குறைவாக இருந்தது. பின்னர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானபோது ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்றனர். இதனால் சில ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்ததாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் அல்ஃபோன்ஸ் தனது சமூக இணையதள பக்கம் ஒன்றில் கமல்ஹாசனை சந்தித்த நிகழ்வு பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதில் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். அதேநேரம் சில அஜித் ரசிகர்கள் அவருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவரின் கேள்விக்கு பதிலளித்த அல்ஃபோன்ஸ் புத்திரன் தான் 8 வருடங்களாக அஜித்தை சந்திக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அஜித்தை சந்திக்க முயற்சிப்பதும் அதில் ஏமாறுவதும் இப்படி உங்களைப் போன்றோர் கேட்பதும் வலிக்கும் தம்பி. ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களை வைத்து படமெடுத்தால் 100 நாட்கள் படம் ஓடும் என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…