சூர்யா படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, ஒரு கேள்வியை மட்டும் கேட்காதீங்க எரிச்சலாக இருக்கிறது என மனம் திறந்துள்ளார்.
எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம், சூரரைப் போற்று, வீட்ல விஷேசம் உள்ளிட்ட திரைப்படங்களின் நாயகியாக நடித்துள்ளவர் அபர்ணா பாலமுரளி. இவர் தற்போது உடல் எடை கூடியுள்ளார். இது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பலரும் அவரின் நிலைமை புரியாது குண்டாகிவிட்டார் அது இது என கண்ட மேனிக்கு பேசி வருகின்றனர். இதனால் அவர் கடுப்பில் இருக்கிறார் போல. சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், குண்டாகி இருப்பவர்களை அவர்களின் நிலைமை பற்றி புரியாமல் கிண்டல் கேலி செய்கிறீர்கள். இது அவர்களுக்கு எப்படி நடந்தது, என்று துளிகூட தெரியாமல் பேசாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
மேலும் எந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்கிற கேள்வியை கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…