அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் நரேன். இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த நரேன், பின் கைதி, விக்ரம் படங்களில் மிக முக்கிய வேடத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களிலும் அவர் நடிப்பார் என்றே அனைவரும் நம்புகின்றனர்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணமான நரேனுக்கு தற்போது 14 வயதில் ஒரு பெண் குழந்தையும், புதிதாய் பிறந்த ஆண் குழந்தையும் இருக்கின்றனர். குழந்தை பிறந்த விசயத்தை புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார் நரேன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…