தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.
தமிழில் கடைசியாக யசோதா படத்தில் நடித்திருந்தார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 11-ந் தேதி இந்த படம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அள்ளிக்கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வந்தது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசைட்டிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சமந்தா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அதில், இந்த நோய்க்காக கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகதவும், தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், நடிகை சமந்தா தற்போது ஐதராபாத்திலுள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் எனவும் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் யாவும் வதந்தியே என சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…