இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன கருத்து உண்மைதான் எனவும் ராஜராஜ சோழனை இந்து அரசன் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது என்று கூறியுள்ளார் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ்.
ராஜராஜன் காலத்தில் ஏது இந்து ஏது இந்தியா ? இந்தியா என்கிற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காக வந்த இடத்தில் உருவானதுதான். இந்து மதத்தையுமே அவர்கள்தான் உருவாக்கினார்கள். இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நமது. இதையெல்லாம் ஒரு மதம் விழுங்க நினைக்கிறதுதான் சிக்கல்.
சைவம், வைணவம், ஆசீவகம் என பல மதங்கள் இருந்தன. இப்போதும் பின்பற்றப்படுகின்றன. ஆரியர்கள்தான் இந்த வேலையைப் பார்ப்பது. சிந்து சமவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் காளையை குதிரையாக திரித்தனம். முருகனை சுப்பிரமணியனாக மாற்றினார்கள். வள்ளுவருக்கும் காவியும் பூநூலையும் பூட்டினார்கள். வெற்றிமாறன் பேசியது சரிதான். இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும் என கூறியுள்ளார் கருணாஸ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…