மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழிப்பறி கொள்ளையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரியா குமாரி, பிரபல திரைப்பட தயாரிப்பாளரான தனது கணவர் அவர்களது இரண்டு வயது மகளுடன் காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்றுள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே நீண்ட தூர பயண கலைப்பு காரணமாக சிறிது நேரம் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் இருந்த பொருட்களை திருட முயற்சித்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த ரியா, காரை விட்டு இறங்கி கணவரை காப்பாற்றுவதற்காக வந்துள்ளார். அப்போது, ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியா குமாரியை அவரது கணவர் காரில் கொண்டு சென்று உலுபெரியாவில் உள்ள எஸ்.சி.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், நடிகையின் கணவரிடம் முழு விவரங்களையும் சேகரித்துள்ளதாகவும், உடன் சென்ற குழந்தையிடம் பின்னர் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…