ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி கொஞ்சம் ஷாக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தை முந்தி அடிக்க திட்டமிட்டு மிகவும் தீவிரமாக வேலை செய்து வரும் ஜெயிலர் படக்குழு இந்த செய்தியை அறிந்து கொஞ்சம் வருத்தத்தில்தான் இருக்கிறதாம்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி அடுத்து 2 மாதங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வராமல் இருந்தால், நிச்சயம் ரஜினிக்காக படம் ஓடிவிடும் என நினைத்திருந்தார்களாம். ஆனால் அடுத்த இரண்டாவது வாரமே பொன்னியின் செல்வன் வெளியாக இருப்பதன் காரணமாக, ஜெயிலர் படத்துக்கு பல குடும்பங்கள் வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அதான் அடுத்த வாரம் பொன்னியின் செல்வன் வருதுல்ல. அப்ப போயிக்கலாம் என பலரும் இருக்க வாய்ப்புகள் உண்டு. சும்மாவே இப்போது ரஜினியின் கிராஃப் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, பாபா படங்கள் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்விய நிலையில், ஜெயிலர் படமும் மண்ணைக் கவ்விவிடுமோ என ரஜினி ரசிகர்களே கவலையில் இருக்கிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் மற்ற படங்கள் போல இது இல்லை. இந்த படத்தில் டாக்டர், பீஸ்ட் ஹீரோ மாதிரியான சைலண்ட் ஹீரோவாகவே வருகிறார். அதாவது அடக்கி வாசிக்கிறார் ஹீரோ என்கிறார்கள். அவர் அதிரடியாக எல்லாம் செய்தாலும் பஞ்ச் வசனங்கள் எதுவும் இதில் இருக்காது என்றும், நம்மில் ஒருவர் போலத்தான் இருப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
இதனால் ஏப்ரல் முதல் வாரமே படத்தை வெளியிட்டால் 20, 25 தினங்கள் படம் ஓடினால்கூட நல்ல லாபம் கிடைக்கும் என கணக்கு போட்டிருக்கிறார்களாம். திட்டமிட்டதற்கு முன்னாடியே ஜெயிலர் வெளியாகலாம் என்றே கணிக்கிறார்கள் ஆன்லைன் டிராக்கர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…