விலங்கியல் பூங்காவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவால் சந்தானம் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். என்ன நடந்தது ஏன் விமர்சிக்கப்படுகிறார்? உண்மை என்ன தெரிந்து கொள்வோம்
நடிகர் சந்தானம் நடிப்பில் 3 மாதங்களுக்கு ஒரு முறை படங்கள் திரையரங்குகளை படையெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு வாரம் கூட தாங்காமல் அனைத்தும் வெளியேறி ஃபிளாப் ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், சந்தானம் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிக விமர்சனத்தை பெற்றுள்ளது. சந்தானம் இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது டிவிட்டர் கணக்கில், புலிக்கு அருகில் அமர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
சாதாரண டிசர்ட், ஷாட்ஸ் அணிந்து புலியின் வாலைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்துள்ளார். அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் புலியின் தலையில் குத்தினார். இதுபோல பல அட்டூழியங்கள் விலங்கு காட்சி சாலைகளில் நடைபெற்று வருகின்றன. சந்தானத்தின் செயல் இதனை ஊக்குவிப்பது போல இருக்கிறது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது பொறுப்பற்ற நடத்தை, விலங்குகளை காட்சிக்காக கூண்டுகளில் அடைப்பதை நீங்கள் எப்படி ஊக்குவிக்கலாம் என பல ரசிகர்கள் அவரை தாக்கினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…