லியோ படம் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வாரிசுக்குப் பின், விஜயின் அடுத்த படத்திற்கு அனைவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக, காஷ்மீர் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்தப் படத்திலிருந்து த்ரிஷா விலகுவதாகக் கூறப்பட்ட நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களைப் பதிவிட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படக்குழுவின் முக்கியமான நபரின் வீட்டின் துயர சம்பவம் நடந்துள்ளது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா அவரது தாயார் பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று இயற்கை எய்தி விட்டார். இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்ட அவரது தாயார் மரணமடைந்த செய்தி கேட்டதும், தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். எனவே, இன்னும் சில தினங்களில் இவர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பி விடுவார் எனவும், அதுவரை இவருக்குப் பதில் மற்றொரு கேமரா மேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…