Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள்.. நடிகை ஷாக் தகவல்

Aruvi Updated:
விஜய் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள்.. நடிகை ஷாக் தகவல்Representative Image.

அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அதுகுறித்து பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி உள்ளிட்டோர் இதுகுறித்து பேசிவருகின்றனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில் நடிகை பாலாம்பிகாவும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார். பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்தவரின் மகள் பாலாம்பிகா. பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகன் படத்தில் குஷ்பூவுக்கு தங்கை, பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் விஜயகாந்த்துக்கு, திருமதி பழனிச்சாமி படத்தில் சத்யராஜுக்கு தங்கை என பல படங்களில் தங்கை ரோலில் நடித்திருக்கிறார்.

அதேபோல் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் அவருக்கு ஒருகட்டத்தில் வாய்ப்பு குறைய சீரியல் பக்கம் தலைகாட்டினார். அந்தவகையில் நாதஸ்வரம், பிரியமானவளே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் தனது திரையுலக வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருந்தார்.

அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான் நடித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு விஜய், பிரசாந்த் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் அந்தப் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. அதில் உடன்பாடு இல்லாததால் எனது அப்பா, அப்படி ஒன்றும் நீ நடிக்க வேண்டாம் என கறாராக சொல்லிவிட்டார். நான் ஒருவேளை விஜய்யோடு நடித்திருந்தால் எனது வாழ்க்கையே மாறியிருக்கும்.

நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன்.நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன்.அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக இல்லை. தினமும் குடித்துவிட்டுத்தான் எனது கணவர் வருவார். ஒருமுறை எனது மகனை டாஸ்மாக்கிற்கு போக சொன்னார். அப்போதிருந்து எனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். அவரது இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா சமயத்தில் சதய்ராஜ் சார்தான் எனக்கு 20,000 ரூபாய் கொடுத்து உதவினார்” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்