சென்னையில் நடிகை பவ்லின் ஜெசிகா தற்கொலை வழக்கில் அவரதுஐபோன் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரது காதலன் விசாரணைக்கு ஆஜராகாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகை பவ்லின் ஜெசிகா கடந்த வாரம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், காதலனின் நண்பர் பிரபாகரை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெசிகா சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசிய நிலையில், பிரபாகரனுக்கு போன் மூலமாக தொடர்புகொண்ட சிராஜுதீன், ஜெசிகா வீட்டின் பூட்டை உடைத்து பார்க்க சொல்லியுள்ளார்.
பிரபாகரன் தனது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ள நிலையில், ஜெசிகாவின் காதலன் சிராஜுதீனை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதனால் காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…