Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாயமான ஐபோன் சிக்கியது.. நடிகை பவுலின் தற்கொலை வழக்கில் புதிய அப்டேட்!!

Sekar September 23, 2022 & 13:37 [IST]
மாயமான ஐபோன் சிக்கியது.. நடிகை பவுலின் தற்கொலை வழக்கில் புதிய அப்டேட்!!Representative Image.

சென்னையில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை பவுலினின் ஐபோன் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா (29) வாய்தா, துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் வசித்து வந்த பவுலின் தீபா, கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் பவுலின் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது காதலை தான் காதலித்த நபர் ஏற்காத காரணத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தற்கொலை குறிப்பும் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். 

இதற்கிடையே நடிகையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் புகார் கூறியுள்ளார்.போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பவுலின் பயன்படுத்திய ஐபோன் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் கிடைத்துள்ளது.

இதனால் பவுலின் தற்கொலை வழக்கில் புதிய உண்மைகள் எதுவும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்