Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகை பவுலின் தற்கொலை.. புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியது!!

Sekar September 19, 2022 & 16:00 [IST]
நடிகை பவுலின் தற்கொலை.. புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியது!!Representative Image.

தமிழ் சினிமா நடிகை பவுலின் ஜெஸ்ஸிகா எனும் தீபா தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வாய்தா, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பவுலின் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை பவுலின் தற்கொலைக்கு முந்தைய நாள் வெளியே சென்றுவிட்டு, ஆட்டோவில் வந்து சோர்வுடன் இறங்கி வீட்டிற்கு செல்லும் காட்சிகளும், தற்கொலை செய்த பிறகு பவுலினின் காதலனின் நண்பர் பிரபாகரன் பதற்றத்துடன் பவுலின் வீட்டிற்கு வரும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே நடிகையின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்