சென்னையில் காதல் தோல்வியால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வசிக்கும் பவுலின் சினிமா துணை நடிகையாக உள்ளார். இவருக்கு வயது 29. இவர் விஷாலின் துப்பறிவாளன் மற்றும் வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் பவுலின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நடிகை பவுலின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…