சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான பிரச்னைகளை அவ்வப்போது தூசு தட்டி எடுத்து வெளியில் விடுகிறார்கள். தனது இரண்டு திருமணங்களிலும் நிம்மதி இல்லாததால் மீண்டும் தனியாகவே வாழ முடிவு செய்து அம்மாவுடன் வாழ்ந்து வரும் சீதாவுக்கு என்னதான் பிரச்னை.
உண்மையில் சீதாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு, மாடித் தோட்டம், வீடியோக்கள் என இயல்பாகவே இருக்கிறார். ஆனால் எங்கிருந்தோ யாரோ பற்றவைத்த நெருப்பு இணையத்திலும், பத்திரிகைகளிலும் கொழுந்துவிட்டு எரிகிறது.
பார்த்திபனை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்தார் சீதா. படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சீதா, புதிய பாதை படத்தின்போது பார்த்திபனுடன் நெருங்கி பழகி, காதலித்து 1989ல் திருமணமும் செய்துகொண்டார். இருவருக்கும் இரு அழகிய மகள்கள், தத்து எடுத்த ஒரு மகனும் இருக்கிறார்கள்.
10 வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த சீதா, தனது சொந்த வாழ்வில் சில அதிருப்திகளைக் கண்டுள்ளார். பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, திருமண உறவை முறிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். 2001ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுவிட்டார். இருவரும் தனித்தனியே சுதந்திரமாக வாழ்வதென்று முடிவெடுத்துவிட்டனர்.
தன்னுடைய தனிமையிலிருந்து தன்னைக் காத்து கொள்ள தன் திறமையை வீணாக்க கூடாது என மீண்டும் சினிமா வாய்ப்பு தேடவே, வந்தது என்னவோ சீரியல் வாய்ப்புதான். அதையும் தவிர்க்காமல், நடித்து புகழ் பெற்றார். சதீஷ் எனும் நடிகருடன் பழகி, காதலித்து திருமணமும் செய்தார் சீதா.
இப்போது சதீஷ் இலக்கியா எனும் சீரியலில் நடித்து வருகிறார். இவரையும் கடந்த 2016ம் ஆண்டு பிரிந்துவிட்டார் சீதா. திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என இனிமேல் தனியாகவே வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டாராம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…