Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6: கண்ணீரில் மூழ்கும் பிக்பாஸ் வீடு! போட்டியாளர்களின் மறுபக்கம்!

Editorial Desk Updated:
பிக்பாஸ் சீசன் 6: கண்ணீரில் மூழ்கும் பிக்பாஸ் வீடு! போட்டியாளர்களின் மறுபக்கம்!Representative Image.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தனது  சீசன்-6 பகுதியைத் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 11-வது வாரத்தில் வீட்டில் 10-போட்டியாளர்கள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில் பள்ளிக்கூடம் டாஸ்க்கல் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தங்கள் முழுப்பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் புதிய நிகழ்வாகப் போட்டியாளர் கதிரவன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கூட டாஸ்கில் கதிரவன் இன்று டீச்சராக தனது ரோலில் விளையாடி வருகிறார். அவருடன் பிக்பாஸ் வீட்டின் மற்றோரு போட்டியாளரான தனலட்சுமி  வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் அமைதியின் உருவமாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கதிரவன் கோபப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் வெறும் சண்டை மட்டுமே நடந்து வருவதால் ஒரு மாறுதலாக  போட்டியளர்களின் மற்றொரு முகத்தைப் பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த பள்ளிக்கூட டாஸ்கை அளித்தாலும், அதிலும் சண்டை தான் போடுவோம் என்று நிரூபித்துள்ளார்கள். பிக்பாஸ் போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் போட்டியாளார்கள் தங்களின் முழு சுயரூபத்தையும் காட்டும் அளவிற்கு பிக்பாஸின் அடுத்த டாஸ்குகள் அமையும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

அடுத்தாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து தங்களின் குடும்பத்தில் உள்ள முக்கியமான நெருக்கமான உறவுகளிடன் இதுவரை சொல்லாத விசயங்களை ஒரு கடிதமாக எழுதி அனைவரின் முன்னிலையிலும் படித்துக்காட்டி கண்ணீரில் முழுகினார்கள், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களைக் கடிதத்தில் எழுதி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள் சற்று பிக்பாஸ் வீட்டில் சோகத்தை வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து இறுதியாக வெளியான ப்ரோமோவில் விஜய் டிவியில் மெகா ஹிட்டான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா, தனது கடிதத்தில் அவர்களின் அம்மாவிற்கு எழுதிய விசயங்களை அனைவருக்கும் பகிர்கிறார். இதுவரை எனக்குக் குழந்தை இல்லை.

அம்மா, இனிமேல் இருக்குமா என்றும் தெரியவில்லை இறுதிவரை எனது குழந்தையாக நீ இருக்க விரும்புகிறேன் என்ற வரிகளில் தனது அம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தி சகபோட்டியாளர்களையும் கண்ணீரில் மூழ்க வைக்கிறார்.

இதுவரையில் சண்டை சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில், இந்த வாரம் தங்களின் வாழ்க்கையில் உள்ள சோகங்களைப் பகிர்ந்து அவர்களும் கண்ணீரில் மூழ்கிப் பார்க்கும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்துகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்