நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தில் பிறந்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1963ம் ஆண்டு பிறந்து இள வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார்.
1967ல் தனது 4 வயதிலேயே கந்தன் கருணை திரைப்படத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார்.
இளவயதிலேயே தனது தாய், தந்தை இருவரையும் இழந்த ஸ்ரீதேவி, பின்னாளில் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வளர்ந்து நின்றார்.
கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தார். அதுவே கதாநாயகியாக அவரது முதல் படம்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஜோடியாக பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழ் தவிர மலையாளம், ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கினார்.
கமல்ஹாசன் ஜோடியாக மூன்றாம் பிறை படத்தில் நடித்து மிகச் சிறந்த நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…