பெங்ளூரை சேர்ந்த சுவாதி என்பவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கடுமையான பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளுமாறு கூறியிருக்கிறார். மருத்துவர் சொன்னதுபோலவே அவர் ஊசியை செலுத்தியிருக்கிறார். இதனால், சுவாதியின் முகம் பெரியதாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறியிருக்கிறது.
முகம் வீங்கிய காரணத்தால் சுவாதி கடந்த 20 நாட்களாக வீட்டி விட்டு வெளியே வரவில்லையாம். இதனால், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் ஃபோன் செய்து கேட்டிருக்கிறார். அதற்கு டாக்டர் வீக்கம் சீக்கிரம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால், தற்போது வரையிலும் சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லையாம்.மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் ஒழுங்காக பதில் சொல்வது இல்லை என்று சுவாதி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…