தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் யார் யார் இருந்தாலும் தனக்கென எப்போதும் தனி இடத்தைப் பிடித்திருப்பவர் த்ரிஷா. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் திரிஷா, சமீப நாட்களில் பெரிய அளவில் படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வரவுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. மேலும் தளபதி விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் உண்மையாகும் பட்சத்தில் மீண்டும் கில்லி நாஸ்ட்டாலாஜியாவை உருவாக்க இயக்குநர் லோகேஷ் முயல்வார் என்றே தோன்றுகிறது.
கோவாவில் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட த்ரிஷாவுடன் நடிகர் ராணாவும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தான் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது எனவும் ஒரு தகவல் உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…