விக்ரம் படத்துக்கு கிடைத்த வெற்றி போல வேற எந்த தயாரிப்பாளருக்கும் கிடைத்திருந்தால் இந்நேரம் பல அடுக்கு மாடிகளுடன் கூடிய வீடு, பல கோடி மதிப்புள்ள கார்கள், கடற்கரை பங்களா என வாங்கி போட்டிருப்பார்கள். இல்லையென்றால் தொழிலில் முதலீடு செய்து பல மடங்கு சம்பாதித்திருப்பார்கள். ஆனால் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் ஆயிற்றே. அவர் சம்பாதித்த மொத்த காசையும் மீண்டும் சினிமாவுக்குள்ளே இறக்குகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தில் அடுத்தடுத்து 8 படங்கள் தயாராகவுள்ளன.
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் இரண்டு தனித் தனி படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணி ரத்னத்துடன் சேரும் புதிய படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஹெச் வினோத், வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோரிடம் கதை கேட்கப்பட்டுள்ளது. இதில் ஹெச் வினோத் படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இன்னொரு படத்தில் சிம்பு நடிப்பதாகவும், வேறொரு படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றனவாம்.
அநேகமாக கைதி 2 படத்தில் சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக கமல்ஹாசனும் உடன் சேர வாய்ப்பிருக்கிறது.
எது எப்படியோ கமல்ஹாசனுக்கு வெற்றி கிடைத்தால் அது தமிழ் சினிமாவுக்கே வெற்றி என்பது உண்மையாகிவிட்டது. அடுத்த 8 படங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியாகியுள்ளதே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…