கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
15 வது ஐபிஎல் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. போட்டிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஐபிஎல் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இதில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் நேற்று மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவு 188 ரன்களை குவித்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியை காண இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தனது மகன்களான யாத்ரா, மற்றும் லிங்காவுடன் சென்றிருந்தார். அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இதைப்பார்த்த ரசிகர்கள் யாத்ராவை பார்க்கும் போது தனுஷை பார்ப்பது போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…