ஹெச் வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜித்குமார், தனது அடுத்த படத்தை அவ்வப்போது கவனித்தும் வருகிறார். AK62 என்றழைக்கப்படும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் கொடுத்த ஸ்க்ரிப்ட்டில் உடன்பாடு இல்லாமல் மாற்ற சொல்லியிருக்கிறாராம் அஜித்.
இதனால் வருத்தத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன், விரைவில் படத்தை துவங்க முதலில் கதையை ஒப்புக் கொள்ள வேண்டுமே என புலம்பி வருகிறாராம்.
அஜித் ஒன்றும் அவ்வளவு எளிதில் கதையை மாற்ற சொல்பவர் இல்லை. காரணம் அவர் இயக்குநரின் பார்வையை மதிப்பவர். ஆனால் சில சமயங்களில் இயக்குநர்கள் கதையை சொல்லிவிட்டு, வசனங்களில் தங்கள் வேலையை காட்டிவிடுகிறார்கள். அது படப்பிடிப்பின் போது பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்தாலும், படம் வெளியாகி பல்வேறு தரப்பினரால் சர்ச்சைக்கு உள்ளாகிறது. இதனால் ஹீரோவின் இமேஜும் பாதிக்கிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ஸ்கிரிப்டை அஜித் மாற்ற சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்கிரிப்ட் முழுவதையும் மாற்ற சொல்லவில்லை என்பது ஆறுதலான விசயமாக இருந்தாலும், கதை அரசியல் சார்ந்து இல்லாதபோதும், ஒரு சில காட்சிகள், வசனங்களில் அரசியல் தொனி இருப்பதாக கூறி மாற்ற கூறியுள்ளாராம் அஜித். இதனால் விக்னேஷ் சிவன் வருத்தத்தில் இருக்கிறாராம்.
ஏனென்றால் ஒருவேளை கதையை கொஞ்சம் மாற்றினால் கூட படம் நன்றாக வராவிட்டால் என்ன செய்வது என்பதே அவரது பயம். எப்படி கதை வருகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…