மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக எடுத்து வருகிறார். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக இது வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து பொன்னி நதி மற்றும் சோழா சோழா என 2 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று,படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் பாடல்களை போலவே படத்தின் டீசரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…