பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் தான் நடிகை ஆலியா பட் தனது வளைகாப்பு விழாவை தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினார்.
இன்று, நவம்பர் 6 ஆம் தேதி, ஆலியா தனது பிரசவத்திற்காக மும்பையில் உள்ள சர் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நடிகைக்கு அங்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
முன்னதாக ஏப்ரல் 14, 2022 அன்று திருமணம் செய்து கொண்ட ஜோடி ஜூன் மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக தெரிவித்து ரசிகர்களுக்கு இதை உறுதிப்படுத்தினர்.
இருவருக்கும் பெண் குழந்தை பிறந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…