தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாத அளவுக்கு நான் முன்னர் இருந்த ஒரு ரிலேசன்ஷிப் தவறானது என தான் புரிந்துகொண்டதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். இதனால் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் நல்ல திறமையான நடிகைகளில் ஒருவர். இவரது நடிப்பில் பல படங்கள் வெளியானாலும் கடந்த 3,4 வருடங்களாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. இதற்கு காரணம் நடிகர் ஒருவருடனாக காதல், அரசியல்வாதி தயாரிப்பாளருடனான உறவு என கிசுகிசுக்கப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இணைய தளங்களில் இப்படித்தான் பேசப்பட்டது. இதை முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார் அஞ்சலி.
தான் தன்னுடைய கெரியரை கவனிக்காமல் இருந்துவிட்டேன். இதற்கு முன் நான் இருந்த ரிலேஷன்சிப் சரியானது அல்ல. என்னை வளரவிடாமல் செய்துவிட்டது என நான் புரிந்துகொண்டேன் என பொருள்படும்படி அவர் பேசியிருப்பதாக பிரபல இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெய்யுடன் காதல் என பேசப்பட்டது. அதையும் மறுத்த அஞ்சலி பல வதந்திகள் தன்னைச் சுற்றி நிகழ்வதை உணர்ந்தே இருக்கிறார். இதுகுறித்து தான் எதுவும் பேசப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…