பொன்னியின் செல்வன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே உண்மையான தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளையே அணிந்திருந்தனர். இது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இதுதான் முதல் முறை என பலரும் பேசினர். ஆனால் உண்மையில் இதனை அனுஷ்காதான் முதலில் செய்துள்ளார்.
அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி படத்தில் அவர் அணிந்திருந்த அத்தனையும் உண்மை தங்கமாம். பழங்காலத்து டிசைன்களுக்கு ஏற்ப அதைத் தேடி தேடி வாங்கினார்களாம். இதனாலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுஷ்காவைச் சுற்றி பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்ததாம்.
அனுஷ்காவிடம் யாரும் பேச முடியாது, அனுஷ்காவை யாரும் நெருங்க முடியாது என்கிற அளவுக்கு கெடுபிடிகள் இருந்ததாம். நகைகளை அணிந்து, கழற்றி கொண்டு போகவே பாதுகாப்பு படை ஒன்றை வைத்திருந்தாராம் தயாரிப்பாளர். இதில் ஹைலைட் என்னவென்றால் தயாரிப்பு தரப்பு இத்தனை கெடுபிடிகளுடன் கண்கொத்தி பாம்பாக விழித்திருந்தும் 1.5 கிலோ எடையுடைய நகைகளைக் காணோம் என்பதுதான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…