கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தத்ரூபமாக, சுமார் 18 செட்டுகளை உருவாக்கி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தவர் கலை இயக்குனர் T. சந்தானம்.
இந்த படத்தை தொடர்ந்து, பல முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தவகையில், இவர் நடிகர் விஜயின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல், தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், மகான் போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இத்துயர சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…