வம்சம் திரைப்படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருள்நிதி. படிப்படியாக நல்ல நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகரானார்.
அவரது நடிப்பில் பெரும்பாலும் ஹாரர், திரில்லர் படங்களே இதுவரை வெளிவந்துள்ளது. அவற்றில் சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் மற்ற அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.
சாந்த குமார் இயக்கத்தில் மௌனகுரு, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலணி, என் ஜே கிருஷ்ணா இயக்கத்தில் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், அறிவழகன் இயக்கத்தில் ஆறாது சினம், ராதா மோகன் இயக்கத்தில் பிருந்தாவனம், மு மாறன் இயக்கத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள், பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே-13 என அடுத்தடுத்து நல்ல படங்களைத் தந்தவர் அருள்நிதி.
இன்று வெளியாகியுள்ள D - Block திரைப்படத்தை எருமசாணி விஜய் இயக்கியுள்ளார். இதுவும் ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படம்தான்.
டி ப்ளாக் திரைப்படத்தைத் தொடர்ந்து இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள் நிதி நடித்து வரும் டைரி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது.
புகழேந்தி எனும் நான் என்ற பெயரில் கரு பழனியப்பன் இயக்கி வந்த திரைப்படம் தாமதமாகியுள்ள நிலையில், ஏற்கனவே வெற்றி பெற்ற டிமான்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது அடுத்த வருடம் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தேஜாவு திரைப்படமும் வெளியாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…