தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தனது திருமணம் குறித்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ரசிகர்களைத் தன் வசம் கவர்ந்த பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத், பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் காதலில் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக, ரகுலின் தம்பியான அமன்ப்ரீத் கூறியது சமூக ஊடகங்களில் பரவியது.
இது குறித்து, நடிகை ரகுல் ப்ரீத் ட்வீட் செய்துள்ளதாவது,”அப்படியா சொன்னாய் அமன்? என் திருமணம் எப்போது என்று எனக்கும் நீயே சொல்லி விடு. என் வாழ்வைப் பற்றி எனக்கே தெரியவில்லை?” என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…