நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் "யானை" என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வேலையாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் விஜய், ஹரி ஆகியோர் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் உங்கள் ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் மோதல் நிலவி வருகிறதே என கேட்ட கேள்விக்கு,அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் தான், அது தற்போது இல்லை, நீங்களே பாருங்க என்னோட படத்துக்கு அவர் வரிசையா ட்வீட் போட்டுட்டு வரார், யானை படத்தோட ட்ரைலரையும் அவர்தான் லன்ச் செய்தார் என கூறினார்.
மேலும் இதெல்லாம் ஒரு ஹெல்தியான விஷயம். நம்ம 25 வருடமாக இந்த பீல்டில் இருக்கிறோம். என்னுடைய டிராக் வேற அவருடைய டிராக் வேற. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இப்பொழுது அவர் இந்த நிலைமையில் இருப்பது'' என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…