Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi Today Episode: குண்டை தூக்கி போட்ட ராதிகா... லேட்டா வந்த கோபியை வச்சு செய்யும் ஈஸ்வரி அம்மா... இன்னைக்கு எபிசோடு..!

Nandhinipriya Ganeshan [IST]
Baakiyalakshmi Today Episode: குண்டை தூக்கி போட்ட ராதிகா... லேட்டா வந்த கோபியை வச்சு செய்யும் ஈஸ்வரி அம்மா... இன்னைக்கு எபிசோடு..!Representative Image.

Baakiyalakshmi Today Episode: தன்னுடைய தாத்தாவுக்கு பேச பயிற்சி தருகிறார் எழில். சத்தியமூர்த்தி பேசுவதை கேட்டு இனியா ஈஸ்வரி அம்மாவை அழைத்து வருகிறார். தன்னுடைய கணவர் பேசுவதை கேட்டு மகிழ்ச்சியில் திகைக்கிறார் ஈஸ்வரி அம்மா. பிறகு, கோபிக்காக வீட்டில் பாக்கியா காத்திருக்கிறார். ஆனால், நெடு நேரமாகியும் கோபி வரவில்லை. அப்போது எழுந்து வந்த ஈஸ்வரி பாக்கியாவை ஏன் இன்னும் தூங்காம இங்க உட்கார்ந்துட்டு இருக்கன்னு  கேட்கிறார். பாக்கியா உண்மைய சொல்ல, அப்படியே உட்கார்ந்து கொள்கிறார் ஈஸ்வரி அம்மா. 

லேட்டாக வீட்டுக்கு வந்த கோபி கார் ஹாரன் அடிக்க பாக்கியா கதவை திறக்க போக, ஈஸ்வரி போகாத என தடுத்து நிறுத்துகிறார். அவனே திறந்துட்டு வரட்டும் என சொல்கிறார். அவன் உள்ளே வந்ததும் ஹாரன் அடிக்கிறேன்ல. கேட்டை திறக்க மாட்டீயா? என்ன கன்னாபின்னாவென்று கத்துகிறார் கோபி. உடனே ஈஸ்வரி அம்மா நீ நெனச்ச நேரத்துக்கு வீட்டுக்கு வருவ உனக்காக முழிச்சிட்டு இருக்கணுமா? அக்கம் பக்கம் யாரும் இருக்க மாட்டாங்களா எதுக்கு ஹாரன் அடிக்கிற என திட்டுகிறார். 

கோபி எதையோ சொல்லி சமாளிச்சிட்டு மேலே போய்விடுகிறார். இப்படி இருக்கையில், ஈஸ்வரி பாக்கியாவிடம் அவன்கிட்ட நீ ஒரு விஷயத்தை கவனிச்சாயா கோபி அவங்க அப்பா கிட்ட பேசுரது இல்ல. அவரு அவனைப் பார்த்தாவே முறைக்கிறாரு, இவனும் அவருக்கு உடம்பு சரியில்லாம போனதிலிருந்து பார்க்க வராதே கிடையாது. எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்கு என கூறுகிறார். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கோபி ரூமுக்குள் செம டென்ஷன்ல இருக்கும்போது ராதிகா வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார். அதில், நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன் நான் உங்க வீட்ல இருக்கு உங்கள பார்க்கணும் மறந்துடாதீங்க என கூறுகிறார். உடனே கோபி போன் போட்டு ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், ராதிகா தான் சொன்ன விஷயத்துல உறுதியாக இருக்கிறார். இதனால் கடுப்பில் கோபி போனை தூக்கி போட அந்த நேரத்தில் பாக்கியா உள்ளே வந்து விடுகிறார். ராதிகா கொடுத்த டென்ஷனால் கோபி பாக்கியா மீது கோபப்படுகிறார்.

பாக்கியா என்ன பிரச்சனைன்னு சொல்லுங்கனு கேட்க, என்னுடைய பிரச்சனையே நீதான் சொல்லு இப்ப என்ன பண்ண போற என கோபி பாக்கியாவை திட்டுகிறார். அடுத்த நாள் காலைல சத்தியமூர்த்தி  ஈஸ்வரி என பெயர் சொல்ல இனியா என்னுடைய பெயரைச் சொல்லுமாறு கேட்கிறார். அவரும் சொல்ல அதன்பிறகு இனியா பாக்கியாவை  அழைத்து தாத்தா பேசுவதை சொல்கிறார். 

ஆனால் பாக்கியா கோபி பற்றிய சிந்தனையில் இருக்க இதை கவனித்த எழில் என்னாச்சு என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல அவர் போனா போகட்டும் நீ எதற்கு அதைப் பத்தி கவலைப் படுற உனக்காக நாங்க இருக்கோம் என்று சொல்கிறார். சும்மா எப்ப பார்த்தாலும் எதுக்கு அப்படி சொல்ற என எழிலை திட்டி அனுப்பி விடுகிறார் பாக்கியா. மற்றொரு பக்கம் ராதிகா, கோபியை பற்றி யோசிக்காமல் தூங்காமல் இருக்கிறார். அதோட இன்னைக்கு எபிசோடு முடிவடைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்