கோபி தனது அம்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்து பயந்து கொந்தளித்து அவசர அவசரமாக வீடு திரும்புகையில் ஆக்ஸிடன்ட் ஆகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான் என ஆரம்பிக்கிறது இன்றைய எபிசோட்.
உங்க புள்ளைய ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க. என் பொண்டாட்டிய பாக்க வந்தான்.... என ராதிகாவின் கணவன் கோபத்தில் கொந்தளித்துச் செல்ல, கோபியின் வீடே அல்லோலப்படுகிறது. ஜெனி, இனியா, கோபியின் அம்மா என அனைவரும் பீதியில் இருக்க, உடனடியாக கோபிக்கு ஃபோன் கால் பறக்கிறது.
எதிர்முனையில் பேசும் கோபியை பேச விடாமல் கத்துகிறார் கோபியின் அம்மா. உன்ன பத்தி எவனோ வீட்டுக்கு வந்து எதையோ சொல்லிட்டு போறான். நீ உடனே வீட்டுக்கு கிளம்பி வா.. பரபரக்கும் காட்சிகளுடன் பதைபதைக்கும் கோபி காரிலேயே வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறான்.
பதற்றமடைந்து இருந்ததால் வழியில் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் செல்ல திடீரென வண்டியைத் திருப்பி மரத்தில் மோதுகிறது கார். கோபி அவசர கதியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.
மருத்துமனையிலிருந்து ஃபோன்கால் உங்க ஹஸ்பண்ட்டுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிட்டு என ராதிகா, பாக்யா இருவருக்கும் செல்கிறது. பாக்யா ஆட்டோவிலும், ராதிகா காரிலும் மருத்துவமனைக்கு வந்து சேர்கின்றனர். இருவரும் கதவைத் திறந்து கொண்டு வருவதாக புரோமோ முடிகிறது.
பாக்யா ராதிகாவை சந்தித்தாரா, கோபியின் நாடகங்கள் தெரியவந்ததா. உண்மையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…