விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் கோபி தனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு காதலிக்கும் பெண்ணுடன் பழகி வருகிறான். ஏற்கனவே திருமணமான அந்த பெண் அவளது கணவனை பிரிந்து ஒற்றைப் பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறாள். இவர்களுக்குள் இருக்கும் தொடர்பு மெல்ல மெல்ல கோபியின் தந்தைக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் கோமாவில் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வர ஆரம்பித்திருக்கிறது. எழிலுக்கும் தனது அப்பாவின் வண்டவாளங்கள் தெரிந்துவிட்டது. சமீபத்தில் பாக்யா குறித்து ராதிகாவுக்கும் பின்னர் கோபியின் தந்தை சொல்லி அம்மாவுக்கும் தெரிந்துவிட, பாக்யாவுக்குதான் இது பேரதிர்ச்சி.
கோபி ஆக்ஸிடன்ட் ஆகி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் என கோபியின் மனைவி பாக்யாவுக்கும், காதலி ராதிகாவுக்கும் ஒரே நேரத்தில் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வர படபடவென ஆட்டோவில் ஏறி வந்துவிட்டார் பாக்யா. காரில் சர்ரென்று வந்து இறங்கிவிட்டார் ராதிகா. உடனடியாக கோபியைச் சந்திக்க நேரடியாக அவசரப் பிரிவுக்கே நுழைந்துவிட்டார்.
ராதிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு கோபி கெஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்த பாக்கியலட்சுமிக்கு உலகமே ஒரு நொடியில் இருண்டதைப் போல வானம் தலையில் இடிந்து விழுந்ததை போல மயங்கி விழுகிறாள்.
அருகிலிருப்பவர்கள் அவரைத் தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திகின்றனர்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாக்கியா தனக்கு நிகழ்ந்த துரோகத்தை நினைத்து தன்னை மறந்து நொடிந்து நடந்தே வீடு செல்கிறார். கோபி தன் மீது எரிந்து விழுந்தது, தன்னை வெறுத்து பேசிய விசயங்களையெல்லாம் நினைத்து மனதிற்குள் அழுதுகொண்டே செல்கிறாள்.
இதற்குள் கோபியின் வீட்டுக்கு விசயம் தெரியவே கோபியின் அம்மா கலங்குகிறார். உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என துடிதுடிக்கிறார். மருத்துவமனையில் கோபி எதுவுமே தெரியாதது போல பேசுகிறார். அடுத்தடுத்து என்னென்ன நிகழ்கிறது என்பதை பார்க்கலாம்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…